“கேடில் விழுச்செல்வமாம் கல்வி
நாட்டில் அனைவருக்கும் கிடைக்கிறதா?”
நாளும் வசதிக்கேற்ற நால்வகை கட்டணங்கள்,
வாடும் ஏழைக்கு ஒரு வசதியும் இங்கு இல்லை.
அதுவும்,
சேற்றில் கால் வைத்து
குருதியை நீராய் பாய்ச்சி
அன்பாய் உயிரை விதைத்து வாழ்க்கையை நாற்றங்கால் நட்டி
சோறு போடும் என் தாய்க்கும்
தகப்பனான என் விவசாயிக்கு
உயர் கல்விக்கு வழியில்லை இங்கே
இந்த வலியை போக்கவே ,
வாழ வழிகாட்டும் வாழ்க்கை கல்வி
ஏழை எளியோர்க்கும் உயர்த்தர கல்வி
உயிர் நிலையில் வாழ ஒழுக்கத்துடன் கூடிய கல்வி
இதை உருவாக்கவே இந்த உயிரும் மனமும்
அதுவே இந்த “ஈசன் கல்வி அகம்”.